மொத்தப் பக்கக்காட்சிகள்

வெள்ளி, 27 ஏப்ரல், 2012

மழையில் கரையும் இதயம்


மழையில் கரையும் இதயம்

மழை பொழியும் நாளில் மனம்
மகிழ்ச்சி கொள்ளுது
மனதிலுள்ள கவலையெல்லாம்
மறைந்து போகுது


ஈரம் பட்ட மரங்களெல்லாம்
சிலிர்த்து நிக்குது
எழில் நிறைந்த பூக்களில் நம்
இதயம் தொலையுது




கூடுதிரும்பும் பறவைக் கூட்டம்
கோலம் போடுது வானில்
சின்ன சின்ன மேகமெல்லாம்
சிதறி ஓடுது


இடியிடிக்கும் போது மனம்
பதறிப் போகுது
இடையில் வரும் மின்னலினால்
கண்ணும் கூசுது


குளிர் நிறைந்த காற்று வந்து
உடலை வருடுது
கொஞ்ச நேரம் நனைந்தாலே
உயிரும் கரையுது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக