மொத்தப் பக்கக்காட்சிகள்

ஞாயிறு, 15 ஏப்ரல், 2012

காதலா ? காமமா ?


காதலா ? காமமா ?



*அனலிடை பட்ட விட்டிலும் 
பெண் இடை தொட்ட விரலும் 
துடிக்க தான் செய்கிறது 


*முதலிரவு பூக்கள் எல்லாம் 
பொய்த்து போகின்றன காலையில் 
அடி உன்னைத் தவிர !!


*அமாவாசையன்று வானம் 
நிர்வானப் படுத்த பட்டதே 
அடி உன்னை அங்கு 
பொருத்தி பார்க்க தானோ ?


*என் நிழலில் நான் 
ஒதுங்க முடிவதில்லை 
அதனால் ஒதுங்கிக் கொள்கிறேன் 
உன் நிழலில் 


*உன் சாதியும் என் சாதியும் 
அடித்து கொண்டு சாகட்டும் 
இனி நீ தான் என் பொஞ்சாதி


*மாலை மாற்றும் வரை 
தான் காத்திருந்தோமே
மாலை சாயும் வரையும் 
காத்திருக்க சொல்கிறாயே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக